அஸ்ஸாலாமு அலைக்கும்!

Monday, August 1, 2011

ரமழான் நோன்பின் சட்டங்கள்


                                       ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.

மிகுந்த வயது முதிர்ச்சி குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோய் போன்ற காரணத் தால் நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.

தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி தான் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும்.

மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.

தண்ணீரில் மூழ்குதல் தீவிபத்தில் சிக்குதல் போன்ற அபாயங்களிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விடும் கட்டாயத்திற்கு ஆளானவர் நோன்பு நோற்றுச் சிரமப்பட வேண்டியதில்லை. தவறிய நோன்பைப் பின்னர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

பிரயாணி விரும்பினால் நோன்பு நோற்கலாம். விட்டுவிட அவருக்கு அனுமதியிருப்பதால் விட்டுவிடவும் செய்யலாம். இப்பயணம் உம்ரா போன்றதற்காகவோ வாகன ஓட்டி (டிரைவர்)களாகப் பணி செய்வதற்காகவோ இருக்கலாம். இத்தகையவர்கள் தாம் வசிக்கும் ஊர்களுக்கு வந்தவுடன் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளவேண்டும்.

நோன்பை முறிக்கக்கூடியவை

மனைவியுடன் உடல் உறவு கொள்வது: நோன்பு நோற்று இருக்கும் நிலையில் உடல் உறவு கொண்டு விட்டால் முறிந்த நோன்பை மீண்டும் நோற்பதுடன் அதற்கான அபராதத்தையும் நிறைவேற்ற வேண்டும். அபராதத்தில் முந்தியது ஓர் அடிமையை உரிமை விடுவதாகும். அல்லது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும்.

சுய இன்பத்தைக் கொண்டு அல்லது மனைவியுடன் கொஞ்சிக் குலாவுவது கொண்டு இந்திரியம் வெளிப்படல்

உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.

உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது. (உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.)

மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.

இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது. (பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.)

வேண்டுமென்றே வாந்தி எடுப்பது. (நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது)

நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.

நோன்பின் ஒழுக்கங்கள்
நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.

புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.

வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.

மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.

சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும். இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.

உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.

மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.

நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.

கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.

வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம். 

Sunday, July 24, 2011

வாழ்வின் வசந்தமே வருக


ரமலான் மாதம் பிறந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றனநரகத்தின் வாயில்கள் முடப்படுகின்றன,ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. (ஹதீஸ்) 
இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான்இது வானம்பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!!
நாம் என்ன செய்ய வேண்டும்இதோ சில வழி முறைகள்:
 1. இந்த ரமலானில் முழு நன்மைகளையும் பரிபூரணமான முறையில் அடைந்து கொள்வதற்க்கு இறைவனிடம் துஆ செய்வது இதை இன்று முதல் துவங்குவது.
2. நமக்கு நாமே ஒரு உறுதி மொழி எடுப்பது ரமலானில் அனைத்துவிதமான பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்பேன். (உதாரணமாக: கண்காதுகைகால்)
3. அதிகமாக நம் ஓய்வு நேரங்களை இறைவழிப்பாட்டில் கழிப்பதற்க்கு முயற்சிப்பது.
4. அத்திவாசியமற்ற வேலைகளை ரமலானுக்கு முன் அல்லது பின் மாற்றிக்கொள்வது. உதாரணமாக ரமலானுக்கா செய்யக்கூடிய ஷாப்பிங் மற்றும் துணி எடுப்பது போன்றவற்றை முன்னமே முடித்து விட்டு இபாதத்துக்காக முழுமையாக நம்மை தயாராக்கிக் கொள்வது.
5. 24 மணி நேரங்களையும் ஸுன்னத்தான வாழ்க்கைக்கு ( நாயகம் ஸல் அவர்களின் முழு ஸூன்னாவைப் பேண) ஒரு வாய்ப்பாக இந்த ரமலானை ஆக்கிக்கொள்வது.
6.  நோன்பு சம்மந்தப்பட்ட பிக்ஹ் சட்டங்களை ரமலானுக்கு முன்னே அறிந்து கொள்வது (பேஸ்ட் உபயோகிப்பதுஅத்தர் பயன்படுத்துவதுஊசி போடுவது)
7. ஆபிஸிலும்டிரைவிங்கில் பொதுவாக ஓய்வாக இருக்கும் போது அதிகமாக ஸலவாத் ஒதிக்கொள்வது.
8. குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு ஜூஸ்வு அல்லது 3ஜூஸ்வு குர் ஆனில் இருந்து ஓதுவது என்று வழமைப்படுத்திக்கொள்வது. இந்த ரமலானில் ஒன்று / மூன்று குர் ஆன் முழுமையாக ஓதி முடிப்பதற்ககு முயற்சிப்பது.
9. அதிகமாக நற்பண்புகளை வளர்த்துக்கொளவது, (அதற்க்கு எதிரான கோபத்தை முழுமையாக விடுவதுபுறம்பேசுவதை தவிர்ப்பதுபொய்யை தவிர்ப்பது).    யார் மீதாவது  கோபமாக இருந்தால் இந்த ரமலானில் அவரை மன்னித்து அவரோடு உறவை தொடர்வது.
10. முடிந்த அளவு டிவி பார்பதை தவிர்ப்பது ( நியூஸ் கேட்பதையும் சேர்த்து)
11. இப்தார் மற்றும் ஸஹர் நேரங்களில் ஹலாலான உணவை எடுப்பது ( முடிந்த அளவு நம் சொந்த வருமானத்தில் இருந்து ஆக்குவது)  ஹராமான உணவை விட்டு முழுமையாக் தவிர்ந்திருப்பது.
12. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை முழுமையாக ஒரு தடவை இந்த ரமலானில் படித்து முடிப்பது.
13. தொழுகைகளை ஜமாத்தோடும்முன் பின் ஸுன்னத்தோடும் நிறைவேற்றுவது.
14. நபிலான இபாதத்தில் ஈடுபடுவ‌து ம‌ட்டும‌ல்லாம‌ல்ப(F)ர்ளான,வாஜிபான விஷயங்களில் மிக கவனமாக  இருப்பது. (குடும்பத்தை கவனிப்பதுஆபிஸ் வேலைகளில் கவனமாக இருப்பது வாஜிபாகும்.) 
 -          ஹஸனி

life changed







  
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமான அல்லாஹ்வின் பெயரால் 
அவரது வருகைக்கு முன்பு வரை எமது வாழ்கை ,,  காற்றில் மறைந்து போன இலைகளை போன்று ....

காற்று அடிக்கும் திசை,,
அல்லது மக்கள் கூட்டம் சென்ற திசையில் பின் தொடர்த்தோம்......

  
நாம் சிலைகளை வணங்கினோம் ....

 
அவை நாம் உருவாக்கியவை  ...
அவை நமது கையால் உருவாக்கப்பட்டவை......

 
மற்றவர்கள் மனிதர்களை வணங்கினார்கள் ; 
மனிதர்கள் ...

 
அவர்கள் முன்பு ஒரு காலத்தில் எம்மை போன்று வாழ்தவர்கள் ....
buddha

    
அரசர்கள் , ராணிகள் அல்லது இறை தூதர்கள்.....

 
 மற்றவர்கள் அவர்களது தலைவர்களை கண் மூடிதனமாக பின்பற்றினார்கள் !

  
சிலர் வேறு வழிகளை தேடினார்கள் ,,
   
 
நெருப்பை  வணங்கினார்கள் .....
 
மற்றவர்களுக்கு அந்த சிந்தனை அழக்காகதோன்றவில்லை ....
அதனால் அதை அணைக்க லானார்கள் 

 ஆச்சரியம் அனால் உண்மை ,,
  
சிலர் சிறு குழந்தைகளை வணங்க ஆரம்பித்தார்கள் .....

அந்த  பெண் கடவுளுக்கு கல்வி தேவைபடுகிறது ...

அக்கடவுளுக்கு உணவும் , ஒய்வும்தேவைப்படுகிறது ....!!
American Nepalese people honour Sajani by DarkFibre.

விரும்பினால் பெண் கடவுள் தன்மை நீக்க முடியும்,,
விரும்பினால் வாழும் பெண் கடவுளதுகடமைகளையும் நீக்க முடியும் ...

அதன் மூலம் இன்னொரு சிறு பெண் குழந்தை அந்த இடத்தை பெறுகிறாள் !!!

வேறு சிலர் சற்று அதிகமாக சென்று  ,,
எலிகளை வணங்க நினைத்தார்கள் !!

வியப்பாக இருக்குதா ?!!

இந்தியவில் ராஜஸ்தான்லுள்ள ஒரு கோவில்,,

எலிகளை மட்டும் வணங்குவதற்காக ஒரு கோவில்  !!

மற்றவர்களுக்கு இந்த சிந்தனை சரியாக தோன்றவில்லை !!!

சில மக்கள் இருக்கிறார்கள் , அவர்கள்  வணங்குவது ....

பசு மாடு !!

மீண்டும் சிலருக்கு அந்த சிந்தனை ,,
 கற்பனை செய்து கூட பார்க்க முடியாயவில்லை!!!

சிலர் சில கொடுமையான சடங்குகளில் ,,
ஈடுபடலானார்கள் !!

பெரும்பான்மையானவர்கள் உண்மையில்,,
பணத்தை வழிபட தொடங்கினார்கள் !!

 மற்றவர்கள் அவர்களது ,,
   மனோ இச்சையயை வழிபட தொடங்கினார்கள் ...... 
அதன் உச்ச கட்டமாக ,,
  அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் ,,

நிச்சயமாக  எது வேண்டுமானாலும்...

அவர்களது இச்சையயை தீர்த்து கொள்வதற்காக !!!

பலர் உண்மையில் ,,
  ஷைத்தானை வணங்குகிறார்கள்!

நாம் எதை பின் பற்றிய போதிலும் ,,

Teach your Children to Worship Satan by lopolis.

 
அதன் முடிவு !!!


  
உண்மையில் நமக்கு பெருத்த நஷ்டம் !!!
 
அதற்கும் மேலாக நாம் பல மோசமான செயல்களில் எடுபட்டோம் ,,நமது பெற்றோரையும் உறவினர்களையும் கைவிட்டுவிட்டோம் ...

 
எமது மனைவியரை கோடுமை படுத்தி ....


பெண்களை இழிவு படுத்தி....


எமது குடும்பத்தினர்களை கோடுமை படுத்தி..... 

எமது குடும்பத்தினர்களை  கொலை செய்து !

எமது வீடுகளில் இருந்து ....
கருணையும் மன்னிப்பும் மறைந்து விட்டன 
 
வலிமையானவர்கள் பலமிள்ளதவர்களை கொடுமை செய்கிறார்கள் ....

வலிமையானவர்கள் பலமிள்ளதவர்களை கொல்கிறார்கள்...

 
நாம் எமது பக்கத்துக்கு வீடுகர்ரகளுடன் முறையாக நடந்து கொள்வது இல்லை ....

இன்னும் பல வழிகளில் !!
noisy neighbor gifts, noisy neighbor gift, noisy neighbor
 merchandise, gifts for noisy neighbor, gift for noisy
 neighbor
நாம் மது அறுந்துகிறோம் ........

இன்னும் முறை கேடான பாலியல் தொடர்புகளில் !!!!
வாழ்கையின் அனைத்து மட்டங்களிலும் ஏமாற்றுவது மற்றும் பொய் சொல்வது ,,
CheatingCouple.jpg picture by sexybaby3doubleo
   
என்பது சாதாரணமாகி விட்டது !!

 ஒழுக்க கேடான செயல்கள் ,,
  
சட்டமாக மட்டும் ஆகவில்லை .....
அவை ஆசிர்வதிக்க படுகின்றன !!!

எமது சமுதாய நோய்கள் ...
 மேலும் ...

மென்மேலும் ...
எல்லைகள் எல்லாம் கடந்து ...

ஐயோ  இவருக்கு மரத்தை திருமணம் செயவேனுமாம் !!!

நல் ஒழுக்கம் ...

என்பது வீசி எரியக்கூடியா குப்பையாகிவிட்டது !! 
 

குறிகோள்கள் அற்ற வாழ்கை ....
விடையளிக்கப்படாத பல கேள்விகள் எம்மிடம் உள்ளன  .....
வாழ்கை எந்த அர்த்தமும் இல்லை ..... 

நாம் செத்த அல்லது குருடான படைப்புக்களை போன்று ,,part1: lost.blind.dead by Aimi::..

  
ஏதும் இல்லாத இடத்தில நடக்கிறோம் .....
உண்மையில் நாம் மிக ஆழமான 
முடிவில்லாத இருளில் இருக்கிறோம் .....


திடீரென ,,Perhentian Island, Terengganu, Malaysia (Poem - Clouds Amaze Me) by Shutterhack.
அந்த ஆழமான முடிவில்லாத இருள் மறைய தொடங்குகிறது ...
Het Licht by Jean de la Tête.
உண்மையின் குரல் உயர்த்தப்படுகிறது ...

அல்லாஹ்வின் அருள் உலகிற்கு அனுப்ப படுகிறது ...
மனித குளம் எதிர்பார்த்து இருந்த அந்த அருள் நிறைந்த பொன் நாள், இறுதியில் வந்தது ....
 எமது உள்ளத்தில் ஒளி வீசக்கூடிய உண்மை ....

அந்த நாளில் தான் அவர் எம் வாழ்கையில் வந்தார் ,,the vast beauty of love by job_earth.

  
நமக்கு  நேரன வழியை காண்பித்தார் ...

அவர் எம்மை ஒரே ஒரு தெளிவான
நேரான பாதையின் பக்கம் அழைத்தார் ....

அவர் எம்மை தன்னிகரில்லா படைபாலனை மட்டும்
வணங்க சொன்னார் ....

ஒரே பாதையில் பயணித்த அணைத்து இறை தூதர்களையும்
நம்ப சொன்னார் ...

அவர்கள் அனைவரும் ஒரே செய்தியே சொல்லவே வந்தார்கள் ........
அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியதை கொடுத்து
!! 
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை !!

"நாங்கள் அல்லாஹ்வை விசுவசிப்பதோடு எமக்கு அருளப்பட்டதையும் அபிரகாம் இஸ்மாயில் இசாக் யாகூப் மற்றும் கோதிரதாருக்கு அருபப்பட்டதையும் , அத்துடன் மூசா மற்றும் ஈசா மற்றும் அவர்களது இறைவனிடமிருந்து தூதர்களுக்கு அருளப்பட்டதையும் விசுவாசிக்கிரோம் . நாம் அவர்களுக்கு இடையில் எந்த வேறுபடையும் காண மாடோம் . அவனிடமே நாம் சரண் அடைகிறோம் ."
குரான்  3:84 

 
இறைவனை தவிர நாமும் நமது மூதாதையர்களும் வணங்கிய 
அனைத்தையும் விட்டு